... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, May 27, 2012

10 வதுபோட்டி...







10 வதுபோட்டி தாளையடி சென்அன்ரனிஸ் அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும் இடம்பெற்றது. இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  சென்அன்ரனிஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில்நாகர்கோவில் வெண்மதி அணி  10  பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்  4 விக்கெட்டைமாத்திரம்  இழந்து    108  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. வெண்மதி அணி  சார்பாக நிதர்சன் 15 பந்துகளை எதிர்கொண்டு  27 ஓட்டங்களைப் பெற்றார்.  ( இதுவரை நடைபெற்ற போட்டிகளில்  108 ஓட்டங்களே அதிகூடியஓட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது ). பந்துவீச்சில்   தாளையடி சென்அன்ரனிஸ் அணிசார்பாக டினேஸ் 2 ஓவர்கள் பந்துவீசி  14 ஓட்டங்களை கொடுத்து  1  விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தாளையடி சென்அன்ரனிஸ் அணி 4.4 ஓவர்களில்     அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 22 ஓட்டங்களைப் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியைத்தளுவியது. தாளையடி சென்அன்ரனிஸ் அணிசார்பாக உமாகரன் 7 பந்துகளில் 9 ஓட்டங்களைப்பெற்றார். நாகர்கோவில் வெண்மதிஅணி சார்பாக பந்துவீச்சில்   சதீஸ் 2 ஓவர்கள் பந்துவீசி  4 ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை கைப்பற்றினார்.
>

No comments:

Post a Comment