... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 26, 2012

6 வது போட்டி....






6 வது போட்டி தாளையடி சென்அன்ரனிஸ் அணியினருக்கும் குடத்தனை செல்வா அணியினருக்கும் இடம்பெற்றது. நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  சென்அன்ரனிஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தனர்இதன்படி முதலில் செல்வா அணி 9.5 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்   அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து  39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. செல்வா அணி சார்பாக தசேந்திரன் 12 (15 பந்தில்) ஓட்டங்களைப் பெற்றார். சென்அன்ரனிஸ்  வி.கழக அணி சார்பாக ரொக்சன்  3 ஓவர்கள் பந்துவீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசி 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5விக்கெட்டுக்களை கைப்பற்றினார். (இதில் இவர் கற்றிக் சாதனையையும் படைத்தார்)
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   தாளையடி சென்அன்ரனிஸ் அணி  4.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து  40 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இதில் செல்வா அணி சார்பாக ஜீவன் 12 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நிதேஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 16 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்


>

No comments:

Post a Comment