... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, May 27, 2012

8வது போட்டி...






8வது போட்டி குடத்தனை உதயசூரியன் அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும் இடம்பெற்றது.  இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  உதயசூரியன் அணி   களத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில் வெண்மதி அணி  10 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்   9 விக்கெட் டுகளை இழந்து  51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. வெண்மதி அணி சார்பாக கோகுலதாசன் 18 பந்துகளை எதிர்கொண்டு 20 ஓட்டங்களைப் பெற்றார். உதயசூரியன் அணிசார்பாக பந்துவீச்சில் செல்வக்குமார்  3  ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணி  10 ஓவர்களில்   6 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியைத்தளுவியது. பந்துவீச்சில் வெண்மதி அணி சார்பாக கீர்த்தனன் 2 ஓவர்கள் பந்துவீசி  3  ஓட்டங்களை கொடுத்து  2  விக்கெட்டை கைப்பற்றினார்
>

No comments:

Post a Comment